மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம்
சிறந்த சமூக சேவைக்கான "கௌரவ டாக்டர்" பட்டம் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் திண்டுக்கல் முகமது அனஸ்-க்கு வழங்கப்பட்டது
HIGHLIGHTS
சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக 49 வது "மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா" மதுரையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறந்த சமூக சேவைக்கான "கௌரவ டாக்டர்" பட்டத்தை அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி தேசிய தலைவர், தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் திண்டுக்கல் முகமது அனஸ் பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வேந்தர். முனைவர். பாண்டியராஜன் தலைமை தாங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முன்னாள் துணை கண்காணிப்பாளர் சோலைமலை முன்னிலை வகித்த்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் டாக்டர்.வழக்கறிஞர் திண்டுக்கல் முகமது அனஸ் பேசும்போது, கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் நின்று சமூக சேவை செய்து வருகிறேன். எனது சமூக சேவைக்கு இந்த டாக்டர் பட்டம் மிக பெரிய ஒரு அங்கீகாரமாக இருக்கும். மென்மேலும் சமூக பணியை அதிகம் செய்ய தூண்டுகோலாக இது இருக்கும். என்னை போன்று பல மாற்றுத்திறனாளி சமூக சேவகர்கள் இந்தியா முழுவதும் என்னை விட சிறந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெளியில் வர வேண்டும், பல பட்டங்களை பெற முயற்சி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டால் தான், நமக்கான தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று கூறினார்.