Begin typing your search above and press return to search.
இரண்டு வருடத்திற்கு பிறகு கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர் இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
HIGHLIGHTS
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஆலயங்கள் திறப்பதில் பல தடைகள் இருந்து வந்தது. பின்னர் வெள்ளி ,சனி ,ஞாயிறு கிழமைகள் மட்டும் மூடப்பட்டு இருக்கும் என அரசு அறிவித்து இருந்தது.
படிப்படியாக நோய் தொற்று குறைந்து தற்போது அரசின் விதிமுறைகள் சற்று தளர்வுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் , திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் தங்கத் தேரோட்ட புறப்பாடு நடைபெற்றது.
இதில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டு வருடத்திற்கு பிறகு கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேரோட்டம் நடைபெற்றதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்