பஞ்சாப் அரசைக்கண்டித்து திண்டுக்கல் பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரை திருப்பி அனுப்பியதை கண்டித்தும் பஞ்சாப் காங்கிரஸ் அரசைக்கண்டித்தும் இந்த ஊர்வலம் நடந்தது
HIGHLIGHTS
பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் உள்ள குறைபாட்டை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கச் சென்ற பிரதமரின் வாகனத்தை பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மறியல் செய்து திருப்பி அனுப்பியதை கண்டித்தும், பாதுகாப்பு வழங்கத் தவறிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கி, மணி கூண்டில் முடிவுற்றது. இந்த ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.