/* */

திண்டுக்கல் அருகே காரில் தீ விபத்து : புதுக்கோட்டையை சேர்ந்தவர் உயிர் தப்பினார்

காரை நிறுத்திய சில நிமிடத்திலேயே காரில் வேகமாக தீ பரவியதன் காரணமாக கார் முழுவதும் எரிந்து சேதமானது

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே காரில் தீ விபத்து : புதுக்கோட்டையை சேர்ந்தவர்  உயிர் தப்பினார்
X

திண்டுக்கல் பைபாஸ் சாலையிலுள்ள மேம்பாலத்தில் எதிர்பாராத வகையில் தீப்பிடித்து எரிந்த கார்

திண்டுக்கல் அருகே பைபாஸ் சாலையில் ஓடும் காரில் நேரிட்ட தீ விபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்தவர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்தவர் பகுருதீன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் தனது காரின் கண்ணாடிகளை மாற்றுவதற்காக விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று தனது காரை எடுப்பதற்காக புதுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் வந்த பக்ருதீன் கண்ணாடிகளை மாற்றிவிட்டு மீண்டும் ஊருக்கு தனது காரில், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எம்விஎம் கல்லூரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரில் புகை வருவதாக அருகில் சென்ற நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த பக்ருதீன் காரில் இருந்து இறங்கிய சில நிமிடத்திலேயே காரில் வேகமாக தீ பரவியது. இதன் காரணமாக கார் முழுவதும் எரிந்து சேதமானது .தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.ஆனால் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக விட்டது. காரில் உள்ள மின் வயர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..

Updated On: 13 Jan 2022 4:25 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை