ஒடிசாவிலிருந்து மதுரைக்கு 40-மெட்ரிக் டன் ஆக்சிஜன் டேங்கர்கள் ரயில்கள் மூலம் வருகை.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் தொற்றால் பாதிப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கோலாவிலிருந்து அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை கண்காணிக்க தமிழக தலைமை செயலாளர் இறையன்பு 2 அதிகரிகளை நியமித்தார்.
அதனடிப்படையில் ஒடிசா மாநிலம் ரூர்கோலாவில் மதுரைக்கு 40-மெட்ரிக் டன் ஆக்சிஜன் 5 டேங்கர்களில் ரயில்கள் மூலமாக
திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி ரயில் நிலையத்திற்கு சென்றது. அங்கிருந்து ரயிலிலிருந்து கிரேன் மூலம் கீழே இறக்கி ஆக்சிஜன் சிலண்டர்களுடன் டேங்கர் லாரிகளானது மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.