/* */

தர்மபுரியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

தர்மபுரியை சேர்ந்த காதல் ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
X

தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ள காதல் ஜோடி பன்னீர்செல்வம்- மகா.

தர்மபுரி அருகே உள்ள புழுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகா(19). இவர் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் உடன் படிக்கும் பன்னீர்செல்வம்(21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மகாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த மகா காதலித்த பன்னீர்செல்வத்தை கடந்த 20-ந் தேதி கொல்லாபுரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி இன்று தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


Updated On: 25 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!