/* */

மழைக்கு தாக்குப்பிடிக்காத கால்வாய் - 4 ரோடு முழுவதும் சாக்கடை நீர்

தர்மபுரியில், அரை மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்காத கால்வாய்களால், 4 ரோடு முழுவதும் சாக்கடை தண்ணீர் வழிந்தோடியது.

HIGHLIGHTS

மழைக்கு தாக்குப்பிடிக்காத கால்வாய் -  4 ரோடு முழுவதும் சாக்கடை நீர்
X

அரை மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்காத, தர்மபுரி  கால்வாய்கள் 4 ரோடு. 

தர்மபுரி மாவட்டத்தில், திங்கட்கிழமை பரவலாக மழை பெய்தது. தர்மபுரி நகரப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தர்மபுரி பேருந்து நிலையம் அருகே, 4 ரோடு பகுதியில் மழை நீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து ஆறாக ஓடியது.

இதனால் 4ரோடு பகுதியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாக்கடை தண்ணீரிலே நடந்து சென்றன. சாலை ஓரங்களில் உள்ள சாக்கடை கால்வாய் மற்றும் மழைநீர் கால்வாய்களை, நகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாரததால் சாக்கடையில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டு. கழிவுநீர் கால்வாய் தண்ணீரும் மழைநீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

அரை மணி நேரம் பெய்த மழை மழையால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக சாலையில் சாக்கடை நீரும் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாக்கடை அடைப்புகளை தூர்வாரி சரி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 7 Dec 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...