Begin typing your search above and press return to search.
தருமபுரி நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தருமபுரி மாவட்டத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு, தேவையின்றி சுற்றுபவர்களிடம் அபராதம் வசூல் செய்தும் வருகின்றனர்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை எச்சரித்தும், அபராதம் வசூல் செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி நகரில் அனைத்து சாலைகளையும் தடுப்பு அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போன்று தருமபுரி பென்னாகரம் சாலை முற்றிலும் தடுப்பு அமைத்து மூடியுள்ளனர். ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.