/* */

கணவன் மனைவியை ஊரை விட்டு தள்ளி வைத்த கிராம முக்கியஸ்தர்கள்

கட்டப் பஞ்சாயத்து அமைப்பு எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கணவனும் மனைவியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

HIGHLIGHTS

கணவன் மனைவியை ஊரை விட்டு தள்ளி வைத்த கிராம முக்கியஸ்தர்கள்
X

கடலூரில் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட தம்பதிகள்

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பஞ்சம் குப்பம் ரோடு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்-தேவி.கணவன் மனைவி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அம்மனுவில், எங்கள் ஊரில் 16 வயது சிறுமிக்கு கடந்த 16.06. 2021 அன்று திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்ததாக ஊர் முக்கியஸ்தர்கள் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். மேலும் ஊரில் ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர்.

நாங்கள் நத்தம் புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி 17 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களை ஊரில் இருக்கக்கூடாது, கோவில் விசேஷங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ஊரில் நடக்கும் சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது எனவும் கூறி இழிவுபடுத்தி ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர் என கணவன் மனைவி இருவரும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்களை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

Updated On: 25 Oct 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...