கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்
கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது
HIGHLIGHTS
போக்குவரத்து துறை சார்பில் கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பல்வேறு பணிகளுக்கு கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை அதிக மாணவ மாணவிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 500 வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இம்முகாமில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கல்லூரிகள், பள்ளி வாகன ஓட்டிகள், பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் ஆர்வமாக வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வந்தனர்.
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி, பண்ருட்டி வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன், நெய்வேலி வாகன ஆய்வாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து பணி அலுவலர்கள் முக கவசம் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.