குடும்ப அட்டை இல்லாத பழங்குடி இனத்தவர் களுக்கு குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம்
வருகின்ற ஆகஸ்ட் 28 -ஆம் தேதி சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தகவல்
HIGHLIGHTS
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாத பழங்குடியினத்தவர்கள், குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் பின்வரும் இடங்களில் 28.8.2021 அன்று சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.கடலூரில் வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டியில் கிராம நிர்வாக அலுவலகம், தொரப்பாடியிலும், குறிஞ்சிப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி, வெங்கட்டங்குப்பம் பகுதியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில். ஸ்ரீமுஷ்ணம், விருதாச்சலம் ஆகிய பகுதிகளில், அந்தந்த வட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும், திட்டக்குடியில் பெண்ணாடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமகளில் பழங்குடியினர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.