/* */

கடலூரில் ஒரு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

கடலூரில் ஒரு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடலூரில் ஒரு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:  4 பேர் கைது
X

கடலூரில் கஞ்சா கடத்தியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு பேர்

கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முனிஸ் என்ற முனுசாமி என்பவரிடம் 1.1/4 கிலோ கஞ்சா இருந்தது போலீசார் கண்டறிந்தனர். அதேபோல அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் கே.என் பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர், நவநீதம் நகர் தினகரன், தங்கராஜ் நகர் ராஜேஷ், ஆகியோரையும் கைது செய்தனர்.சோதனையில் காவல்துறையினர் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 27 Feb 2022 5:40 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...