Begin typing your search above and press return to search.
புகார் தெரிவிக்க எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்: கடலூர் எஸ்பி
பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் எஸ்.பி. அறிவிப்பு.
HIGHLIGHTS
கடலூர் மாவட்ட புதிய எஸ்.பி யாக பொறுப்பு ஏற்று கொண்ட சக்தி கணேசன், கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, மது கடத்தல், மது விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோதமான செயல்கள் குறித்து தனது செல் எண்ணில் 9498111190 பொதுமக்கள் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
மேலும் பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய புகார்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்களின் செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது வாட்ஸ் அப்பில் புகார்களை தெரிவிக்கலாம். பொதுமக்களின் புகார் குறித்து உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.