Begin typing your search above and press return to search.
கடலூர் வெள்ளி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கியது அரிய வகை ஆமை
கடலூர் வெள்ளி கடற்கரையில் முட்டை இடுவதற்காக வந்த ஆலிவ் ரெட்லி வகையை சேர்ந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
HIGHLIGHTS
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி ஆமைகள் வருவது வழக்கம். அரிய வகைகளில் ஒன்றான ஆலிவ் ரெட்லி ஆமை கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.
கடலுார் தேவனாம்பட்டிணம் சில்வர் பீச்சில் நேற்று மாலை 25 கிலோ எடை கொண்ட ஆமை இறந்து கிடப்பதாக வனத் துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லா ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் இறந்த ஆமையை மீட்டு கரையோரத்தில் புதைத்தனர்.
இறந்த ஆமை ஆலிவ் ரெட்லி வகையைச் சேர்ந்தது எனவும், முட்டையிட கரைக்கு வரும் போது, மீன்பிடி வலைகளில் சிக்கி காயமடைந்து இறந்திருக்கலாம் அல்லது அலையின் சீற்றம் காரணமாக முச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.