இன்னைக்கு ஞாயிறு: கடலூர் மீன்பிடி சந்தையில் வழக்கம்போல் கூடிய மக்கள்
நாளை ஆடி கிருத்திகை என்பதால் மீன்பிடி சந்தையில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்க கடலூர் மீன்பிடி சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் குவிவது வழக்கம். நாளை ஆடி கிருத்திகை என்பதால் வழக்கத்தை காட்டிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நேற்று காவல்துறை சார்பில் கடலூர் மீன்பிடி சந்தையில் மீன் வாங்க வந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கியும், கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று கடலூர் துறைமுக போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர் துறைமுகம் மீன்பிடி சந்தையில் முகக் கவசம் அணியாத 15 நபர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் ஏழு மணிக்கு மேல் மீன்பிடி சந்தையில் மீன்களை விற்க அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளனர்.