/* */

போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி

போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

HIGHLIGHTS

போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி
X

சென்னையை சேர்ந்த ஜெயின்லால் சவுத்ரி என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் திருப்போரூர் அடுத்த பையூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறி சில முக்கிய ஆவணங்களை கொடுத்து முதல்கட்டமாக 6 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

பின்னர் மேலும் தொழில் செய்ய பணம் தேவைப்படுவதாக கூறி, நான்கு லட்சத்தை பெற்றுள்ளார். பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்தில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பணத்தை வாங்கவில்லை என கூறி ஜெயின்லால் சவுத்ரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பைனான்சியர் ஜெயின்லால் சவுத்ரி சார்பில் ஆவணங்களை சரி பார்த்தபோது, அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதனை அடுத்து ஜெயின் லால் சவுத்ரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் இன்று மாலை புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 19 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...