/* */

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை

கூடுவாஞ்சேரியில், ஊரடங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட மாட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை
X

கூடுவாஞ்சேரியில் விதிமீறி செயல்பட்ட இறைச்சிக்கடை.

கொரோனா பரவலை தடுக்க, தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இன்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையை இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இறைச்சிகடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை மாட்டிறைச்சி கடை திறக்கப்பட்டு வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான மக்கள் மற்றும் தனியார் உணவக சேவையாளர்கள் காலை முதலே, அந்த இறைச்சிகடையில் கூட்டமாக நின்று இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இதனை வீடியோவாக படம் பிடித்த சிலர் சமூக வளைதலங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

கொரொனாவை கட்டுபடுத்த விதித்த விதிமுறை மக்கள் நலனுக்கு என்றாலும், அதிகாரிகளும் வியாபாரிகளும், பொதுமக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல், விதிமீறுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 23 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...