Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு: ஆதரவற்றவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் தினமும் உணவு
செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள், ஆதரவற்றோருக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் உணவு வழங்கி வருகின்றனர்.
HIGHLIGHTS
கொரோனா பரவலை தடுக்கஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் வசித்து வந்தவர்கள், ஆதரவற்றவர்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தினமும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பசியால் வாடும் சுமார் 300 பேருக்கு நேரில் சென்று உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்த கரோனா காலகட்டத்தில் விஜய் ரசிகர்கள் உணவு தயார் செய்து கொடுத்து வரும் செயலை மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.