/* */

கூடுவாஞ்சேரியில் மூதாட்டியிடம் சிபிஐ போலீஸ் போல நடித்து 6 சவரன் தங்க செயின் அபேஸ்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சிபிஐ போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் அபேஸ் செய்து கொண்டு தப்பி சென்ற மர்ம ஆசாமிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரியில்  மூதாட்டியிடம் சிபிஐ போலீஸ் போல நடித்து  6 சவரன் தங்க செயின் அபேஸ்
X

குரோம்பேட்டை லட்சுமிபுரம் பெரியார் தெருவை சேர்ந்த ராமசாமியின் மனைவி லட்சுமிகாந்தா(70). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக நேற்று குரோம்பேட்டையிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு பஸ்சில் வந்தார்.

பின்னர் கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தனது பேத்தி வீட்டிற்காக என்ஜிஓ காலணி, ராஜாஜிநகர் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒருவர் மூதாட்டியிடம் வந்து நேற்றுதான் ஒரு பெண்ணை கழுத்தை அறுத்து செயினை பறித்து சென்றனர்.

இதுபோல் கழுத்தில் செயினை போட்டுகொண்டு செல்லக்கூடாது. செயினை கழட்டுங்கள். அதை பேப்பரில் மடித்து உங்கள் பையில் போட்டு அனுப்புகிறேன் என்று கூறினார். பின்னர் அதோ பாருங்கள் ஐயா சாலையில் சென்று வருவோரிடம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.

உங்களை ஐயா கூப்பிடுகிறார் வாங்க என்று கூறி சிறிது தூரம் அழைத்து சென்றார். அப்போது வெள்ளை நிற உடையில் இருந்தவர் சிபிஐ போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து இன்னொருவரிடம் கழுத்தில் இருக்கும் செயினை கழற்றும்படி கூறுகிறார் உடனே அந்த நபர் தனது கழுத்தில் இருக்கும் செயினை கழற்றி அவரிடம் கொடுக்கிறார்.

இதனை நம்பிய மூதாட்டியும் தனது கழுத்தில் இருந்த செயினை கழற்றி கொடுக்கிறார். இதில் அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வெறும் பேப்பரை மடித்து அந்த மூதாட்டியின் பையில் போட்டு அனுப்புகின்றனர்.

இதனையடுத்து 6 சவரன் செயின் உடன் மூன்று பேரும் ஒரே பைக்கில் ஏறி தப்பி சென்றனர். பின்னர் பேத்தி வீட்டுக்கு சென்ற மூதாட்டி பையிலிருந்த பேப்பரை பிரித்து பார்த்தபோது அதில் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். போலீ சிபிஐ போலீசாரை தேடிவருகின்றனர்.

இதில் ஒரே பைக்கில் வந்த 3 நபர்களும் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் செயின் அபேஸ் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மர்ம ஆசாமிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொரோனா நேரத்திலும் நூதன முறையில் மூதாட்டியிடம் செயினைப் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Updated On: 29 April 2021 5:15 PM GMT

Related News