Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழக மக்கள் பிரச்சினைகளில் திமுக கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டி, மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செங்கல்பட்டு மாவடத்தில், மேற்கு மாவட்டத் செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், கிழக்கு மாவட்டத் செயலாளர் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டார்.
இதில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மறுவாழ்வு உதவிகள் வழங்கவேண்டும், அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதை கண்டித்தும், விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தியும், கண்டன உரையாற்றினர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.