மறைமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மாேதி விபத்து: 4 பேர் படுகாயம்
மறைமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை அருகே இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக சென்ற லாரி மோதியதில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் கிராமம், விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், செல்வம், சகாதேவன், ஏழுமலை இந்த 4 பேரும் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்குவாரியில் கூலி வேலைக்கு இரண்டு பைக்குகளில் சென்றபோது மறைமலைநகர் போர்டு கம்பெனி எதிரே பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன், செல்வம், சகாதேவன், ஏழுமலை ஆகியோர் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய மறைமலைநகர் அடுத்த கீழக்கரனை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்ச்செல்வனை பிடித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.