செந்துறை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
செந்துறை அருகே அயன்தத்தனூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அயன்தத்தனூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம், திருவள்ளுவர் ஞான மன்றம் மற்றும் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், அயன்தத்தனூரில் உள்ள காங்கேயன் ஏரி, பின்னேரி ஏரி, கடம்பா ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தம் செய்து, தடுப்பு சுவர் மற்றும் கரைகளில் மரக்கன்றுகள் நடவேண்டும். மயான சாலை சீரமைத்து தர வேண்டும். திருநாகேஸ்வரர் கோயிலை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்க வேண்டும். கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கசங்க மாவட்டத் தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். திருவள்ளுவர் ஞான மன்ற தலைவர் ராவணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.