/* */

சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. 5பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

HIGHLIGHTS

சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X

அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான சரவணகுமார் என்பவர் காதலிப்பதாக கூறி உள்ளார். தான் படிக்க வேண்டும் என சிறுமி கூறியதையும் மீறி நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியதையடுத்து தாயார் மற்றும் சிறுமியின் சித்தி சிறுமியை திட்டி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சிறுமியை தனியாக அழைத்து சென்ற சரவணகுமார் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சரவணகுமாரின் தாயார் சூரியகலா சிறுமியின் தாயார் ஜோதிமணியிடம் பேசி திருமணத்திற்கு முடிவு செய்தனர். திருமணம் நடைபெற்ற சில மாதங்களில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சரவண குமாரின் தாயார் சூரியகலா சிறுமியை மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தனது மகனுக்கு மற்றொரு திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக சரவணகுமாரின் தாயார் சூரியகலா அக்கா மீனா அவரின் மாமா மோகனராஜ் மற்றும் சிறுமியின் தாயார் ஜோதிமணி சித்தி சித்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரின் தாயார் சூரியகலா மற்றும் சிறுமியின் தாயார் ஜோதிமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 15 March 2022 8:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...