/* */

அரியலூர்-சென்னை பேருந்து மாலை 3 மணியுடன் நிறுத்தப்படும்

அரியலூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்து மாலை 3 மணியுடன் நிறுத்தப்படும்.

HIGHLIGHTS

அரியலூர்-சென்னை பேருந்து மாலை 3 மணியுடன் நிறுத்தப்படும்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் த.ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கம் செய்யக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கும், ஜெயங்கொண்டத்திற்கு இரவு ஒன்பது மணிக்கும், செந்துறை இரவு 8 மணிக்கும், திட்டக்குடி இரவு 8 மணிக்கும், பெரம்பலூர் இரவு 9 மணிக்கும், கும்பகோணம் இரவு 7 மணிக்கும், தஞ்சாவூர் இரவு எட்டரை மணிக்கும், திருச்சி இரவு 8 மணிக்கும் கடைசி பேருந்துகள் இயக்கப்படும். இதற்குப் பின்னர் மேற்கண்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது.

இதுபோன்று ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 4 மணிக்கும், விருத்தாசலத்தில் இரவு 8 மணிக்கும், காட்டுமன்னார்குடி இரவு 8 மணிக்கும், கும்பகோணம் இரவு 8 மணிக்கும், அனக்கரை இரவு 9 மணிக்கும், அரியலூர் இரவு எட்டரை மணிக்கும், திருச்சி இரவு 7 மணிக்கும், கடைசி பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும். நகரப் பேருந்துகள் இரவு ஒன்பதரை மணி நடை எடுத்து அந்தந்த ஊர்களுக்கு இரவு தங்கள் செய்யப்படும் பேருந்துகள் வழக்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் த.ரத்னா அறிவித்துள்ளார்.

Updated On: 19 April 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...