/* */

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
X

கீழப்பழுவூர் அருகே சாலை மறியல் செய்ய முயன்றவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள காணிக்கைபுரம் ரயில்வேகேட் பகுதியில் சாலை கடந்த ஒரு வருட காலமாக மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட முடிவெடுத்து கூடினர்.

இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் இளையபெருமாள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Updated On: 27 Oct 2021 5:37 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...