மத்திய அரசை கண்டித்து அரியலூரில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து அரியலூரில் தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
HIGHLIGHTS
அரியலூர் அண்ணா சிலை அருகே, மத்திய அரசை கண்டித்து, சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி மற்றும் தோழமை சங்க தலைவர்கள், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, எல்.பி.எப் மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்திரன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் விஜயகுமார், எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் இராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் சந்தானம், அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மணிமேகலை, சகுந்தலா, லதா, மாதர் சங்கம் பாக்கியம், மலர்கொடி, தனலெட்சுமி, மின்சார துரை கண்ணன், டி.ஐ.ஒய்.எப். மாவட்ட தலைவர் துரை அருணன், லிகாய் சங்க கோட்ட பிரதிநிதி சவுரிராஜ், துணைத் தலைவர் இரவி மற்றும் கட்டுமானம் அங்கன்வாடி பணியாளர்கள் மின்சாரத்துறை ஊழியர்கள் எல்.ஐ.சி லிகாய் சங்கமுகவர்கள் கலந்து கொண்டனர்.