/* */

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே மகன் திருமணம் முடிந்த கையோடு தந்தை வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே  மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு
X

சாலை விபத்தில் இறந்த பூராசாமி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ளிவிடை கிராமத்தைச் சேர்ந்தவர் பூராசாமி(55). இவரது மகன் திருமணம் குருவாலப்பர் கோவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்தை முடித்துவிட்டு பின்னர் மண்டபத்தில் உள்ள சீர்வரிசை பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பள்ளிவிடை கிராமத்தில் இருந்து மண்டபத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருமண மண்டபத்தின் அருகில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பூராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்சுருட்டி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு 108 மூலம் அனுப்பி வைத்து இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

மகன் திருமணம் முடிந்த கையோடு தந்தை வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 15 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...