/* */

அரியலூர் அருகே லாரி மோதி விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே லாரி மோதி விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்
X

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை விபத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் முனியமுத்து(55). விவசாயியான இவர், நேற்று தனது மகள் மகாராணி(28) யை (திருமணம் ஆனவர்) அழைத்துக் கொண்டு, அரியலூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அஸ்தினாபுரம் அருகே சென்ற போது பின்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி, முனியமுத்து சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முனியமுத்து அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையறிந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, லாரிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்த வந்த கயர்லாபாத் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

உயிரிந்த முனியமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், படுகாயமடைந்த மகாராணியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 Nov 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.