அரியலூர் அருகே லாரி மோதி விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்
அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் முனியமுத்து(55). விவசாயியான இவர், நேற்று தனது மகள் மகாராணி(28) யை (திருமணம் ஆனவர்) அழைத்துக் கொண்டு, அரியலூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அஸ்தினாபுரம் அருகே சென்ற போது பின்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி, முனியமுத்து சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முனியமுத்து அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, லாரிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்த வந்த கயர்லாபாத் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
உயிரிந்த முனியமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், படுகாயமடைந்த மகாராணியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.