அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேற்படி முகாமில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் எஸ்.மகாலட்சுமி தலைமை தாங்கினார். மூத்த சிவில் நீதிபதி N.அழகேசன் முன்னிலை வகித்தார்.
மருத்துவ முகாமில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்சி.கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், விரைவு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதிஆனந்தன், தலைமை நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் சார்பு நீதிபதி மும்மூர்த்தி மற்றும் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சாந்தி, சித்த மருத்துவர் வெங்கடேசன், இயற்கை மற்றும் யோகா மருத்துவர் முத்துக்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும், நீதிமன்ற பணியார்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மருத்துவப் பயன்கள் குறித்தான வாழ்வியல் முறைகள், யோகாசனங்கள், இயற்கை மருத்துவ முறைகள் பற்றி சிறப்புரையாற்றி, அலோபதி சிகிச்சை, ஹோமியோபதி சிகிச்சை, சித்த மருத்துவ சிகிச்சை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேற்படி மருத்துவ முகாமில் 450 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.