Begin typing your search above and press return to search.
வரும் 29ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு
வருகிற 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று, அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பு: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அக்டோபர் 2021 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். மேலும் கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்த்pற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.