/* */

அரியலூர்: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்

அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் வளர்ச்சிபணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: வளர்ச்சி பணிகளை  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்
X

அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களுக்குட்பட்ட கீழப்பழூர், மேலப்பழூர், ஏலாக்குறிச்சி, செங்குழி உள்ளிட்ட பகுதிகளில் சாலை வதசி மேம்பாடு, வீடு கட்டும் திட்டம், தடுப்பணை கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, கீழப்பழூர் ஊராட்சியில் காந்தி நகர் பகுதியில் ரூ.5.25 இலட்சம் மதிப்பில் சமுதாய கழிவறைப் பணிகளையும், அண்ணாநகர் பகுதியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தோக்கத் தொட்டியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், போதுமான அளவில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். கிராமப்புறங்களில் சுகாதாரத்தின் முழுமையாக பேணுவதில் முக்கிய பங்காற்றும் சமுதாய கழிவறைகளை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்தவும், முறையாக கழிவறைகளை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு விதமான நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கவிதா என்பவரால் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பசுமை வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், வீட்டின் கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து அதன் பயனை பெற வீட்டின் உரிமையாளரிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மேலப்பழூர் ஊராட்சியில் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் 700 இல்லங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின்கீழ் முடிவுற்ற 450 பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கீழையூரில் இருந்து பாப்பான் ஏரிக்கு செல்லும் கால்வாய் சீரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், பணியாளர்களிடம் முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, ரூ.17.64 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஏலாக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலத்தையும், ரூ.6.17 இலட்சம் மதிப்பீட்டில் காட்டு ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், இத்தடுப்பணையின் மூலம் அதிக அளவு மழைநீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவ அறிவுறுத்தினார். மேலும், கரையான் குறிச்சியில் கலைசெல்வி என்பவரால் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க பயனாளிகளிடம் அறிவுறுத்தினார்.

தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட செங்குழியில் சின்னதம்பி படையாட்சி ஏரிக்கு செல்லும் வரத்துவாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகளையும், பசுமை வீடு கட்டும் பணிகளையும் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த அனைத்து அலுவலர்களும் பாடுபடவேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரபாகரன், அகிலா, செந்தில் உடனிருந்தனர்.

Updated On: 24 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...