அரியலூர் மாவட்டத்தில் நாளை நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் குறைதீர் கூட்டம்
பொது விநியோகத் திட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10மணி முதல் 1மணி முதல் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், நாளை 11.06.2022 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி முதல் கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
அரியலூர் வட்டத்தில் பார்பனச்சேரி கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் பாப்பாக்குடி (வடக்கு) கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் சன்னாசிநல்லூர் கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஆத்துக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், அக்கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட ஒவ்வொரு வட்டத்திற்கும் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன்படி பயன்பெறலாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.