அரியலூரில் விபச்சாரத்திற்கு பயன்படுத்திய தங்கும் விடுதிக்கு சீல்
அரியலூரில் விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதிக்கு போலீசர் சீல் வைத்தனர்.
HIGHLIGHTS
அரியலூரில் திருச்சி சாலையில் உள்ள வாசவி லாட்ஜ் விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவல் மூலம், அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ராஜவேல் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் நேரடியாக சென்று சோதனை செய்தனர்.
இதில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விடுதியின் ஏஜெண்டாக செயல்பட்ட கீழப்பழுவூர் வெற்றிகண்ணன் (37), மற்றும் தரகராக செயல்பட்ட வாட்ச்மேன் திருச்சி மாவட்டம் கீழஅரசூர் சேகர் (55) ஆகிய 2 நபர்களையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.4 பெண்களையும் தமிழ்நாடு அரசு மகளிர் காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மேற்கண்ட தங்கும் விடுதிக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்பேரில் அரியலூர் துணை கண்காணிப்பாளர் மதன் பரிந்துரையின் பேரில், அரியலூர் கோட்டாட்சியர் மற்றும் அரியலூர் காவல்துறையினர் நேரில் சென்று, மேற்கண்ட வாசவி லாட்ஜிற்கு சீல் வைத்தனர்.