Begin typing your search above and press return to search.
அரியலூர்: கயர்லாபாத் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்ப விழா
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல் நிலையத்தில் இலக்கிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தலின் படி, கயர்லாபாத் காவல் நிலைய காவலர் குடியிருப்பில் காவலர் குடும்ப விழா கொண்டாடப்பட்டது. விழாவினை அரியலூர் உட்கோட்ட (பொறுப்பு )காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையேற்று நடத்தினார்.
இவ்விழாவில் அரியலூர் காவல் ஆய்வாளர் , கயர்லபாத் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், காவலர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். காவலர் குடும்பத்தினருடன் கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு போட்டி, போன்ற இலக்கிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.