Begin typing your search above and press return to search.
கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின
அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஏற்கனவே, கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், ஏரி மற்றும் குளங்கள் பெரும்பாலும் நிரம்பியுள்ள சூழலில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தாழ்வான பகுதிகளை தண்ணீர் தேங்கியுள்ளன.
இதன் காரணமாக, மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 2,000 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களும், கரும்பு பயிர்களும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகள், வயல் பகுதிகளை வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.