Begin typing your search above and press return to search.
அரியலூர் அருகே இறை தேடி வந்த புள்ளிமான் குளத்தில் விழுந்து பலி.
அரியலூர் அருகே இறைதேடி வந்த புள்ளிமான் குளத்தில் விழுந்து இறந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட தளவாய் ஊராட்சி செங்கமேடு கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று இறைதேடி ஊருக்குள் வந்துள்ளது.
செங்கமேடு அம்மன் கோவில் அருகில் உள்ள தாமரைக் குளத்திற்கு அருகே புள்ளிமான் வந்துபோது, ஊரிலுள்ள தெரு நாய்கள் மானை துரத்தியதில் காயமடைந்த மான் குளத்தில் விழுந்தது.
தாமரை செடிகளுக்குயிடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி மான் இறந்தது. இதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் வன விலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் மானை உடற்கூறு பரிசோதனை செய்து குழுமூர் காட்டில் அடக்கம் செய்தனர்.