பிரியங்கா காந்தி கைது கண்டித்து அரியலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் எஸ். எம். சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், மத்தியஅரசை விமர்சித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, சீமான், செங்குட்டுவன், சரவணன், ஆண்டிமடம் ராஜசேகர், ராஜதுரை, மாமு சிவகுமார், துணை அமைப்பு தலைவர்கள் மாரியம்மாள், வழக்கறிஞர் பார்த்திபன், இளைஞர் காங்கிரஸ் சுரேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் ராகவன், பூண்டி சந்தானம், மாணவர் காங்கிரஸ் கபிலன், தொழிற்சங்கம் ஜேபி, ராஜா கலைச்செல்வன், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.