அரியலூரில் சாராயம் காய்ச்சிய 16 பேரை போலீசார் கைது செய்தனர்
அரியலூரில் சாராயம் காய்ச்சிய 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சாராயம் காய்ச்சியதாக 16பேர் போலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பலப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுவதாக போலிசாருக்கு கிடைக்கு தகவலின் பேரில் கைதுவேட்டை தொடர்கிறது.
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கை செயல்படுத்தி வருவதால் அரசு மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பழைய சாராயம் காய்ச்சும் தொழில் செய்பவர்கள் மீண்டும் ஊறல்போடும் பணியை செவ்வன செய்யத்தொடங்கியுள்ளனர். மாவட்டத்தின் பலப்பகுதிகளிலும் சாராய ஊறல் போடப்பட்டு விற்பனை நடைபெறுவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்து வருகிறது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சாராயம் காய்ச்சிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வேளாங்கண்ணி ராபர்ட்,பாலகுமார்,சக்தி துரை,அருள் பிரசாத், கரண், மோகன்ராஜ், மார்க்கண்டேயன்,விஜய் ஆகிய 9 பேரை கைது செய்தனர். அதில் மூன்றுபேர் கல்லூரி மாணவர்கள். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் ஊறல் மற்றும் 10 லிட்டர் சாரயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஜெயங்கொண்டம் அருகே வீரனார்கோவில் பகுதியில் முந்திரி காட்டில் சாராயம் காய்ச்ச போடப்பட்ட ஊறலை பூமியில் இருந்து எடுத்து போலிசார் அழித்தனர். இதில் வினோத், மகாதேவன், வெற்றிவேல், தமிழ்ச்செல்வன், செல்வம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று கோவில்எசனை கிராமத்தில் சாராயம் காய்ச்சிய மார்டின், சப்பாணி ஆகிய 2பேரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் ஊறல் மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தின் பலப்பகுதிகளிலும் சாரய ஊறல்கள் பெருக்கெடுத்துள்ள நிலையில் போலிசாரும் அதிரடி காட்டி சாராயம் காய்ச்சுபவர்களை கைதுசெய்து வருகின்றனர். ஆனால் உயிர் இழப்புகள் வரும்முன்னர் கள்ளச்சாராயத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.