Begin typing your search above and press return to search.
செந்துறை அருகே 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது
செந்துறை அருகே 650கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் வாகனத்துடன் கைது செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் முல்லையூர் கிராமத்திலிருந்து, நேற்று இரவு ரேஷன் அரிசியை மினி லோடு வாகனத்தில் கடத்த முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி பிள்ளை என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரை அரியலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
அவர் ஓட்டிவந்த வாகனத்தை சோதனையிட்டதில், கடத்தி சென்ற 650கிலோ ரேஷன் அரிசி மற்றும் அவரின் அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.