அரியலூர் அருகே 500 கிலோ புகையிலை, குட்கா, ரூ.1.50 ரொக்கம் பறிமுதல்
வெளி மாவட்டத்தில் இருந்து குட்கா வாங்கி பொய்யாதநல்லூரில் வீட்டில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனைசெய்வது தெரியவந்தது
HIGHLIGHTS
அரியலூர் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்த 500 கிலோ புகையிலை, குட்கா மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் அரியலூர் கடைகளில் ஹான்ஸ் மற்றும் குட்கா விற்பனைக்கு கொடுத்த போது, அரியலூர் டி.எஸ்.பி மதன் தலைமையில் போலீசார் குபேந்திரனை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் விசாரணையில் ஈடுபட்ட போது, வெளி மாவட்டத்தில் இருந்து ஹான்ஸ் மற்றும் குட்கா வாங்கி பொய்யாதநல்லூரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து, அதனை கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அரியலூர் டி.எஸ்.பி மதன் தலைமையில், காவலர்கள் குபேந்திரன் வீட்டில் நடத்திய சோதனையில் 500 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், குபேந்திரன் வீட்டில் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்த போலீசார், குபேந்திரன் மற்றும் பரூக் ஆகியோரை கைது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.