/* */

கணவன் கைது- காவல்நிலையத்தில் மனைவி தர்ணா

கணவன் கைது- காவல்நிலையத்தில் மனைவி தர்ணா
X

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீசார் கணவனை கைது செய்ததால் அவரது மனைவி தன் குழந்தையுடன் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த மேகநாதன், கிங்ஸ்லின்தேவகுமார் ஆகிய இருவரும் உறவினர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிங்ஸ்லின்தேவகுமார் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் மேகநாதனின் மகள் அமிர்தவர்ஷினி, தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என கிங்ஸ்லின்தேவகுமார் மீது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கிங்ஸ்லின் தேவகுமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த தேவகுமாரின் மனைவி கலைமணி மகளிர் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கலைமணியை சமாதானப்படுத்திய மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Updated On: 16 Feb 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  6. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  7. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...