/* */

அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து

அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து
X

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சமபந்தி விருந்து வருடந்தோறும் கோவில்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அண்ணாவின் நினைவு நாளான இன்று அரியலூர் நகரில் உள்ள ஆலந்துறையார் ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் சமபந்தி நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவளித்தார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, அனைத்து நபர்களுக்கும் உணவு பொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிசந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Feb 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...