/* */

mullai peryar dam issue-பிரதமருக்கு கடிதம் எழுதிய கேரள எம்.பி: தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு

mullai peryar dam issue முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள எம்.பி., பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

mullai peryar dam issue-பிரதமருக்கு கடிதம் எழுதிய கேரள எம்.பி: தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு
X

பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.

mullai peryar dam issue- கேரள ராஜ்யசபா எம்.பி., ஜோஸ் கே மாணி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும், மக்களும் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் இருப்பதால், பழைய அணையினை இடித்து விட்டு, புதிய அணை கட்ட பாரத பிரதமரும், மத்திய அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இந்த கருத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 'ஜோஸ் கே மாணி கேரளாவில் தமிழர்களின் ஓட்டுக்களை நம்பி அரசியல் செய்பவர். அவர் அரசியல் செய்ய மட்டும் தமிழர்கள் ஓட்டு தேவைப்படும். ஆனால் வெற்றி பெற்றதும் தமிழர்களுக்கு துரோகம் செய்வார். இவரிடம் இருந்து இப்படி ஒரு கண்டிக்கத்தக்க மோசமான தகவல் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த கருத்தை ஜோஸ் கே மாணி வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், அடுத்து வரும் தேர்தல்களி்ல் கேரளாவின் மத்திய மாநிலங்களில் தமிழர்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைத்து ஜோஸ் கே மாணிக்கு எதிராக வேலை செய்வோம் என கூறியுள்ளார்.

Updated On: 28 May 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!