சத்துணவு மையங்களுக்கு ரூ.10 லட்சத்தில் சமையல் பாத்திரங்கள்

கலசபாக்கம் ஒன்றியத்தில் 107 சத்துணவு மையங்களுக்கு ரூ.10 லட்சத்தில் சமையல் பாத்திரங்களை ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்.

Update: 2022-08-08 01:15 GMT

சத்துணவு மையங்களுக்கு பாத்திரங்களை ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் வழங்கினார்.

கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள 107 சத்துணவு மையங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் 26 வகையான சமையல் பாத்திரங்களை ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த பாத்திரங்களை தங்கள் வீடுகளில் உள்ள பாத்திரங்களை எப்படி பத்திரமாக பார்த்துக் கொள்கிறீர்களோ, அதேபோல் சமையல் முடிந்தவுடன் சுத்தமாக கழுவி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை நல்ல முறையில் சமைத்து சுவையாக பரிமாற வேண்டும். இது ஒன்று மட்டுமே உங்களின் கடமையாகும். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் சமையலறை இருட்டில் இருக்கக்கூடாது என்றார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், கோவிந்தராஜிலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News