நாமக்கல் பகுதியில் வருகிற 20ம் தேதி மின்சாரத்தடை

நாமக்கல் பகுதியில் வருகிற 20ம் தேதி மின்சாரம் விநியோகம் தடை செய்ப்படும்.

Update: 2021-10-16 11:45 GMT

நாமக்கல் பகுதியில் வருகிற 20ம் தேதி மின்சாரம் விநியோகம் தடை செய்ப்படும். இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 20ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் நாமக்கல் டவுன், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசானம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News