சுப்ரீம் கோர்ட்டில் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை பெற்ற தமிழக முதல்வருக்கு எம்.பி., பாராட்டு
சுப்ரீம் கோர்ட்டில் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை பெற்ற தமிழக முதல்வருக்கு, அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜேஷ்குமார் எம்.பி., ஆகியோர் புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.;
சுப்ரீம் கோர்ட்டில் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்த, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் அமைச்சர் மதிவேந்தன், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர்.
நாமக்கல்
சுப்ரீம் கோர்ட்டில் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை பெற்ற தமிழக முதல்வருக்கு, அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜேஷ்குமார் எம்.பி., ஆகியோர் புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமானது என்று தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கவர்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாவுக்கும் சுப்ரீம் கோர்ட் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடியாக ஒப்புதல் அளித்தனர். அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும் தான் மாநில ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தையும் - ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி, மாநிலங்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பினை பெற்றுத் தந்த திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி ஆகியோர் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.