முன்னாள் மத்திய இணை அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு

Corona Infection- முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வனுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-04 02:30 GMT

எஸ்.காந்திசெல்வன்.

Corona Infection- முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வனுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லைச் சேர்ந்தவர் எஸ்.காந்திசெல்வன், இவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். முன்னாள் மாவட்ட திமுக செயலாளராகவும், முன்னாள் நாமக்கல் நகராட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு கெரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்களின் ஆலோசனைப்பட்டி அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாமக்கல்லில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News