நாமக்கல் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்து பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-24 06:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், அவரது மனைவி நித்யா (35), இருவரும் நாமக்கல்லில் வக்கீலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு டேனிஷ் (7) என்ற மகனும், தயானி (4) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் 2 பேரும் மோகனூரில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று, அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நித்யா வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சென்ற மோகனூர் போலீசார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நித்யாவின் தாயார் ராஜேஸ்வரி (66), மோகனூர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்ஐ ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News