நாமக்கல் அருகே மூதாட்டிக்கு கத்திக்குத்து - தொழிலாளி கைது

நாமக்கல் அருகே மூதாட்டியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-03 10:45 GMT

நாமக்கல் மாவட்டம் செல்லியாயி பாளையத்தை சேர்ந்தவர் பிச்சையம்மாள் (60). இவரது கணவர் ராஜ் இறந்து விட்டார். இதனால் பிச்சையம்மாள் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் (31). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பிச்சையம்மாளின் பேத்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கேட்டுள்ளார். அவர் மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் பிச்சையம்மாள் தனது பேத்தியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், சம்பவத்தன்று பிச்சையம்மாள் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிச்சையம்மாளின் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். படுகாயம் அடைந்த பிச்சையம்மாளை,  அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags:    

Similar News