நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2022-01-25 17:30 GMT

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்.

கரூர் காமராசர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் இளமாறன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை செயலாளர் கவியரசு முன்னிலை வகித்தார்.

கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன், கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் சங்கர், கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செங்குட்டுவன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர்கள் அர்ஜுன், பெரியசாமி சேதுபதி,நாகராஜ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்று உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியினர் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News